ஒசூர் அருகே ஓடும் பேருந்திலிருந்து குதித்த பள்ளி மாணவி, காயங்களுடன் கிருஷண்கிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சினிகிரிப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் என்பவரது மகள் நவ்யாஸ்ரீ, கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறார். இவர் நேற்று மாலை கெலமங்கலத்திலிருந்து தருமபுரி செல்லக்கூடிய அரசு பேருந்தில் சினிகிரிப்பள்ளி கிராமத்திற்கு மாணவி நவ்யாஸ்ரீ வந்துள்ளார்.
பேருந்து சினிகிரிப்பள்ளி நிறுத்தத்தில் நிற்காமல் பல மீட்டர்கள் தூரம் சென்றதாக சொல்லப்படுகிறது. தனது கிராமத்தில் பேருந்து நிற்காததால் மாணவி ஓடும் பேருந்திலிருந்து குதித்துள்ளார்.
மாணவி சாலையில் விழுந்ததில் பேருந்தின் பின்பக்க டயர் கை மற்றும் காலின் மீது ஏறி சென்றது. விபத்துக்குள்ளான மாணவி அதே பேருந்தில் உத்தனப்பள்ளி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மாணவி உடலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறிதால் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பேருந்து, வழக்கம்போல நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதே விபத்துக்கான காரணம் என மாணவியின் உறவினர்கள் குற்றச்சாட்டுகின்றனர். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : செல்வா (ஓசூர்)
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.