வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மலைப்பாம்பை துன்புறுத்திய இளைஞர்கள் கைது
வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மலைப்பாம்பை துன்புறுத்திய இளைஞர்கள் கைது
வீடியோ காட்சிகள்
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள கோவை குற்றால வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மலைப்பாம்பை துன்புறுத்தி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட இளைஞர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
கொரோனா ஊரடங்கால் கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை குற்றால வனப்பகுதிக்குள் காரில் சென்ற இளைஞர்கள் சிலர் வனப்பகுதியில் காரை நிறுத்தி அங்கிருந்த மலைப்பாம்பை பிடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சி டிக்டாக்கில் வைரல் ஆனது.
இதையடுத்து பூளுவாம்பட்டி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு சட்ட விரோதமாக வனப்பகுதிக்குள் புகுந்து மலைப்பாம்பை துன்புறுத்திய நரசிபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் (25), விஜய் (27) உள்ளிட்ட ஆறு இளைஞர்களை கைது செய்து அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
இதுபோன்ற நபர்கள் மீது அபராதம் மட்டுமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.