முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோடநாடு வழக்கு விசாரணையில் போலீசுக்கு கிடைத்த புதிய தகவல்கள்.. மேலும் சிலர் கைதாக வாய்ப்பு

கோடநாடு வழக்கு விசாரணையில் போலீசுக்கு கிடைத்த புதிய தகவல்கள்.. மேலும் சிலர் கைதாக வாய்ப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்  காவல்துறையினருக்கு புதிய தகவல்கள்  கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 6வது குற்றவாளியான பிஜின் குட்டியின் சகோதரர் மோசஸ் உட்பட 2 பேரிடம் தனிப்படை போலீசார் 7.30 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.  ஜெயலலிதாவின் உதவியாளர்  பூங்குன்றனிடம் 3 நாட்களில் 27 மணி நேரம்  விசாரணை நடத்திய போலீசார் பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.

இந்நிலையில் நேற்று கோடநாடு கொலை வழக்கில்  ஆறாவது குற்றவாளியான  பிஜின்குட்டியின் சகோதரர் மோசஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்.

ஏற்கனவே அதிமுக பிரமுகர் சஜீவன், அவரது சகோதரர் சிபி ஆகியோரிடம் தனிப்படை போலீசார்  விசாரணை நடத்தியிருந்தனர். சிபியிடம் தனிப்படை  மேற்கொண்ட விசாரணையில் அவரும், மோசஸூம்  ஏற்கனவே நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த அன்று இரவு மோசஸிடம்  குற்றவாளிகள் செல்போனில் பேசி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் மோசஸ் விசாரணைக்கு  அழைக்கப்பட்டு இருந்தார். காலை 10.30 மணிக்கு கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு ஆட்டோவில் மோசஸ் உட்பட 3 பேர் வந்தனர். 3 பேரும் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை நடைபெறும் மையத்திற்கு சென்றனர். சிறிது நேரத்தில் அவர்களில் ஒருவர் மட்டும் வெளியேறி விட மோசஸ் உட்பட இருவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

ALSO READ | பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை - அமைச்சர் பொன்முடி

 இந்த விசாரணை மாலை 6 மணி வரை சுமார் 7.30 மணி நேரம் நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் மோசஸ் உட்பட இருவரும் மாலை 6 மணி அளவில் வெளியேறினர். மோசஸ்சுடன் விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட நபர் குறித்த விபரங்களை தனிப்படை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்த வழக்கில் இதுவரை விசாரிக்க படாத நபர்கள் ஓவ்வொருவராக  விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கும் நிலையில், இந்த வழக்கில்  புதிய நபர்களும் தனிப்படை போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தபடுகின்றனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்  காவல்துறையினருக்கு புதிய தகவல்கள்  கிடைத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.  புதிய கோணத்தில் புதிய நபர்களிடம்  தனிப்படை போலீசார்  விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கில் புதியதாக மேலும் சிலர் கைதாக கூடும் என கூறப்படுகின்றது.

First published:

Tags: Coimbatore, Jeyalalitha, Kodanadu estate, Nilgiris, Police, VK Sasikala