முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கரூர் பள்ளி மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் - ஜோதிமணி

கரூர் பள்ளி மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் - ஜோதிமணி

ஜோதிமணி

ஜோதிமணி

கல்லூரிகள், பள்ளிகளில் விசாக கமிட்டி அமைக்க வேண்டும் மாவட்ட, அளவிலான வட்டார அளவில் பெண்கள், சிறுமிகளுக்கு உதவ  ஆலோசகர்களை ஏற்படுத்த வேண்டும் என ஜோதிமணி கோரிக்கை வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கரூர் பள்ளி மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது  செய்யப்பட வேண்டும்.  குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை காங்கிரஸ் கட்சி போராடும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறினார்.

கரூரில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு  பயின்ற மாணவி பாலியல் சீண்டலால் தூக்கிட்டு உயிரிழந்தார். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கரூர் எம்.பி. ஜோதிமணி  உயிரிழந்த பள்ளி மாணவி வீட்டுக்குச் சென்று மாணவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளி மாணவி உயிரிழந்த பிறகு புகார் அளிக்க சென்ற உறவினர்களை காவல் ஆய்வாளர் கண்ணதாசன் தாக்கியுள்ளார்.  தாயை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இரவு முழுவதும் உறவினர்களை காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை காவல் துறை இப்படி  கடுமையாக நடந்து கொண்டால், யார் புகார் அளிக்க செல்வார்கள்.

காவல் ஆய்வாளர் கண்ணதாசனை பணி நீக்கம் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக கரூர் மாவட்ட காவல்துறை பள்ளி மாணவி உயிரிழப்பு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்.

இந்தியா முழுவதுமே பாலியல் ரீதியான குற்றங்கள் நடந்து வருகின்றன. இதில் தமிழகம் விதிவிலக்கா நடந்து கொள்ள வேண்டும் உள்துறையை கைவசம் வைத்துள்ள தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். சட்டரீதியாக சட்டரீதியாக கையாள்வது மட்டுமல்லாமல் பெண்கள் துணிந்து புகார் கொடுக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

Must Read : ஆன்லைனில் போதைப் பொருள் விற்பனை - அமேசான் இந்தியா நிர்வாக இயக்குநர்கள் மீது வழக்குப் பதிவு

கல்லூரிகள், பள்ளிகளில் விசாக கமிட்டி அமைக்க வேண்டும் மாவட்ட, அளவிலான வட்டார அளவில் பெண்கள், சிறுமிகளுக்கு உதவ  ஆலோசகர்களை ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவி உயிரிழந்த தொடர்பான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் அப்படி கைது செய்யும் வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராடும்” இவ்வாறு கூறினார்.

செய்தியாளர் - தி.கார்த்திகேன், கரூர்.

First published:

Tags: Jothimani, Sexual harassment