கரூரில் பிரதமர் நரேந்திர
மோடி போன்று வேடமணிந்து நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த
பாஜக வேட்பாளரால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்தது. கரூர் மாநகராட்சி 48 வார்டுகளில் போட்டியிடும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு தீவிரமாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் 45 வேட்பாளர்கள் தனித்துப் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி 48வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அம்மன் சுரேஷ் என்பவர் போட்டியிடுகிறார்.
மாநகராட்சி அலுவலகத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேடமணிந்து நூதன முறையில் வந்து தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
இதன் காரணமாக மாநகராட்சி அலுவலகம் முழுவதும் பரபரப்பு நிலவியது. கரூரில் தற்போது இந்த நிகழ்வு பேசுபொருளாக மாறியுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இன்றுடன் முடிவடைந்த நிலையில் வேட்புமனு மீதான மறுபரீசலனை பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
செய்தியாளர் : தி.கார்த்திகேயன், கரூர்
Local Body Election Updates | உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகள் உடனுக்குடன் தெரிந்து
இங்கே க்ளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.