கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு புனித சவேரியார் தேவாலய ஆண்டு பெருவிழாவின் 9 ஆம் நாள் திருவிழாவில் இரவு தேர் பவனியும், கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. பத்தாம் ஆம் திருவிழாவான இன்று (3-12-2021) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் தேவாலயம் வரலாற்று சிறப்பு வாய்ந்த தேவாலயம். இந்த தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை கோலாகலமாக பத்து நாட்கள் கொண்டாடபடுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான ஆண்டு பெருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெறுவது வழக்கம்.
9 ஆம் நாள் திருவிழாவினை முன்னிட்டு இரவு தேர் பவனியும், கூட்டுத்திருப்பலியும் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
Must Read : ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 64 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
இந்நிலையில், பத்தாம் ஆம் நாளான இன்று (3-12-2021 ) திருவிழாவை ஒட்டி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக கோட்டாறு சாலை வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் - ஐ.சரவணன், நாகர்கோவில்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Holiday, Kanyakumari