கோலாகலமாகத் தொடங்கிய திற்பரப்பு மஹாதேவர் ஆலய பங்குனி மாத திருவிழா
கோலாகலமாகத் தொடங்கிய திற்பரப்பு மஹாதேவர் ஆலய பங்குனி மாத திருவிழா
திற்பரப்பு மஹாதேவர் ஆலய பங்குனி மாத திருவிழா
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மாலை வேளைகளில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவிழாவின் 10 நாளில் ஆறாட்டுடன் நிறைவடைகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திற்பரப்பு மஹாதேவர் ஆலய பங்குனி மாத திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெறும் 9 கோவில்களில் மூன்றாவது கோவிலான திற்பரப்பு மஹாதேவர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழா இன்று காலை கோவில் தந்திரி மடத்தூர்மடம் சங்கரநாராயணகுரு அவர்களால் மேளதாளத்துடன் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மாலை வேளைகளில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவிழாவின் 10 நாளில் ஆறாட்டுடன் நிறைவடைகிறது. கொடியேற்று நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் : சஜயகுமார் தனஜெயன் நாயர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.