கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர் ஒருவர் சகமாணவிக்கு தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பளுகல் பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலை பள்ளி. இந்த பள்ளியில் தற்போது வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பறையில் தன்னுடன் அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு நண்பர்களின் வற்புறுத்தல் பேரில் தாலி கட்டியுள்ளார்.
மாணவன் மாணவிக்கு தாலி கட்டும் போது சக மாணவர்கள் காகிதங்களை கிழிந்து அவர்கள் மீது மலர்கள் போல தூவி வாழ்த்தியும் உள்ளனர். இதை உடன் இருந்த மாணவர் ஒருவர் செல்போணில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பள்ளி செல்லும் மாணவ மாணவியர்களின் இதுபோன்ற செயல் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.