கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கடல் பகுதியில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு நடைபெற்ற நிலையில் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கடல் பகுதியில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்தது.
இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக சாரல் மழையும் கடல் சற்று சீற்றமாகவே காணப்படுகிறது.
கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு - வைரலான வீடியோ#Kanyakumari வெப்ப சலனம் மற்றும் குறைந்த காற்றழுத்த மண்டலமும் ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தில் கோடை மழை பொழிகிறது.
இந்த நிலையில் தூத்தூர் கடல்
பகுதியில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. pic.twitter.com/jWHokOND29
— Kᴀʙᴇᴇʀ - தக்கலை ஆட்டோ கபீர் (@Autokabeer) April 29, 2022
இந்த நிலையில் தூத்தூர் கடல் சற்று சீற்றமாகவே காணப்பட்ட நிலையில் திடீரென கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு ஏற்பட்டது.
இந்த நிகழ்வு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த நிலையில் அங்கிருந்த மீனவர்கள் இந்த நிகழ்வை பல்வேறு பகுதிகளில் இருந்து படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.