ஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி விமர்சனம்
ஜெயலலிதா பெயரைச் சொல்லி நடத்தப்படும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.

கனிமொழி
- News18 Tamil
- Last Updated: November 29, 2020, 3:32 PM IST
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரசார பயணத்தை திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத்தில் இன்று தொடங்கினார். எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரத்தில் முதற்கட்டமாக மகளிர் சுய உதவிக் குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பெண்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய கனிமொழி, பெண்கள் பொருளாதாரத்தில் சுதந்திரம் பெறவேண்டும் என்பதற்காக திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் தற்போது அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு மீண்டும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மீட்டெடுக்கப்பட்டு உச்சத்தைத் தொடும் என்றும் உறுதியளித்தார்.
ஜெயலலிதா பெயரைச் சொல்லி நடத்தப்படும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றசாட்டை முன்வைத்த கனிமொழி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி, பச்சைத் துண்டை போட்டுக்கொண்டு தானும் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசு கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை வரவேற்கிறார் என்றும், தமிழகத்தில் பெண்களின் கல்விக்காக திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டது என்றும் ஆனால் தற்போது பெண் கல்வி கேள்விக்குறியாகி விட்டது என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் எந்த விதமான தொழில் வளர்ச்சியும் இல்லை. அதேபோல் ஒரு வேலை வாய்ப்பு கூட உருவாக்கப்படவில்லை என்றும் அவர் பட்டியலிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, திமுக பிரச்சாரப் பயணத்தின் போது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அகற்றி விட்டு மீண்டும் திமுக ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடத்தில் உள்ளதை காண முடிகிறது என்றும் தெரிவித்தார். பல்வேறு தொழில் முதலீடுகளை இருப்பதாக கூறி வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் பலமுறை கேட்டும் இதுவரை என்ன முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். நிவர் புயலின் தாக்கம் குறைவாக இருந்த காரணத்தினாலேயே பாதிப்பும் குறைவாக இருந்தது என்று சுட்டிக்காட்டிய கனிமொழி ஏற்கனவே தமிழக அரசு பாடம் கற்றுக் கொண்டும் புயலை எதிர்கொள்ள எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை தற்போது காண முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
ஜெயலலிதா பெயரைச் சொல்லி நடத்தப்படும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றசாட்டை முன்வைத்த கனிமொழி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

கனிமொழி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, திமுக பிரச்சாரப் பயணத்தின் போது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அகற்றி விட்டு மீண்டும் திமுக ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடத்தில் உள்ளதை காண முடிகிறது என்றும் தெரிவித்தார். பல்வேறு தொழில் முதலீடுகளை இருப்பதாக கூறி வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் பலமுறை கேட்டும் இதுவரை என்ன முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். நிவர் புயலின் தாக்கம் குறைவாக இருந்த காரணத்தினாலேயே பாதிப்பும் குறைவாக இருந்தது என்று சுட்டிக்காட்டிய கனிமொழி ஏற்கனவே தமிழக அரசு பாடம் கற்றுக் கொண்டும் புயலை எதிர்கொள்ள எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை தற்போது காண முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்