சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு, வழக்கத்தை காட்டிலும் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகத்தை நோக்கி வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும், 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கு ன தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் ஒரு சில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Also read... முதல்வர் தாயார் குறித்து பேசியது தொடர்பாக ஆ.ராசா கூறிய விளக்கம் என்ன?
எனவே, நண்பகல் 12 முதல் மாலை 4 மணி வரை, விவசாயிகள், பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், வேட்பாளர்கள் பரப்புரை மற்றும் ஊர்வலம் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதால் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu Weather, Weather Update