மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை - கமல் காட்டம்!
மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை - கமல் காட்டம்!
கமல் ஹாசன்
மக்கள் பலம் மக்கள் நீதி மய்யத்திற்கு இருக்கின்றது. எந்த கணிப்பு என்ன சொன்னாலும் மக்கள் என் கையைப் பிடித்தது புத்துயிர் இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்றும் கமல் ஹாசன் தெரிவித்தார்.
மோதி(மோடி) என்கிற வார்த்தையை பயன்படுத்த நான் விரும்பவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி இன்றுடன் ஓரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கட்சிக்கொடியேற்றி தொண்டர்கள் முன் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு வயதாகிறது. இந்த உரை மிக சுருக்கமாக இருக்க வேண்டியது என் கடமை. ஏனெனில் பள்ளிக்குழந்தைகள் காத்துக்கொண்டிருக்கின்றனர். நான் பள்ளிக்கு போகாத பிள்ளையாக இந்த தெருவில் திரிந்தவன் என்றும் கூறினார்.
மேலும் மக்கள் நீதி மய்யத்திற்கு கொஞ்ச கொஞ்சமாக இந்த கூட்டம் கூடியுள்ளதாக தெரிவித்த அவர் நாங்கள் பேராசைபட்டோம் அதையும் மிஞ்சும் அளவிற்கு நம் கட்சி முன்னேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியல் உதவாக்கரை உடைந்து மக்கள் பெருக்கெடுக்கும்போது குளம் வேறு ஆறு வேறு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் தனியே நிற்போம் என்று கூறியது நான் அல்ல நாம் என்றும் அவர் கூறினார்.
மக்கள் பலம் மக்கள் நீதி மய்யத்திற்கு இருக்கின்றது. எந்த கணிப்பு என்ன சொன்னாலும் மக்கள் என் கையைப் பிடித்து புத்துயிர் இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், களம் தயாராக உள்ளதாக என்று கேள்வி கேட்கின்றனர். அவர்கள் நேரில் வந்து சுவைத்து பார்க்கட்டும் என்று தெரிவித்த அவர் மோதி( மோடி) என்கிற வார்த்தையை பயன்படுத்த நான் விரும்பவில்லை என்றும் காட்டமாக தெரிவித்தார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.