முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோருக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி.. தமிழகம் அமைதி பூங்கா என்கிற நம்பிக்கையை புரட்டி போட்டுவிட்டதாக கருத்து

கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோருக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி.. தமிழகம் அமைதி பூங்கா என்கிற நம்பிக்கையை புரட்டி போட்டுவிட்டதாக கருத்து

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்

Kallakurichi Student Death News: தமிழகம் அமைதி பூங்கா என சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் அந்த நம்பிக்கையை புரட்டி போட்டுள்ளீர்கள். - சென்னை உயர்நீதிமன்றம் மாணவியின் பெற்றோருக்கு கண்டனம்

  • Last Updated :

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடலூரை சேர்ந்த 17 வயது மாணவி 12-ம் வகுப்பு படிந்து வந்துள்ளார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தநிலையில் கடந்த 13-ம் தேதி இரவு அவரது பெற்றோரை தொடர்புகொண்ட பள்ளி நிர்வாகம் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறியதாக சொல்லப்படுகிறது.

காவல்துறைக்கு கூட தகவல் தெரிவிக்காமல் மாணவியின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி பெற்றோர் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். சமூகவலைத்தளத்திலும் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற குரல்கள் வலுத்தது.

மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. பள்ளி வளாகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் மாணவர்களை அழைத்து செல்வதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பள்ளி பேருந்தை அடித்து நொறுக்கினர். பேருந்துகளுக்கு தீவைத்தனர். பள்ளியில் இருந்த பொருள்களை எல்லாம் போராட்டக்காரர்கள் சூறையாடினர். போலீஸார் தடியடி நடந்தி அங்கிருந்தவர்களை களைத்தனர். இதனையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டது.

' isDesktop="true" id="773184" youtubeid="ideruxvNvRc" category="tamil-nadu">

நீதிமன்றம் கண்டனம்:

இதற்கிடையில் மாணவியின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது நேற்று நடந்த வன்முறை சம்பவத்துக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

போராட்டம் நடத்த அனுமதி அளித்தது யார்? நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்று மனுதாரரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த போராட்டத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலமாக அவர்கள் திரண்டுவிட்டாரக்ள் என்று மனுதாரர் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

நீங்கள் நிபுணரா - நீதிமன்றம் கேள்வி:

இதனை ஏற்க மறுத்த நீதிபதி மனுதாரர் தான் போராட்டத்துக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. என்ன மெசேஜ்'ஐ நாட்டுக்கு தர முயற்சிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். பிரேத பரிசோதனை தகுதியில்லாத மருத்துவர்கள் கொண்டு நடத்தப்பட்டது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம். நீங்கள் நிபுணரா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது:

மனுதாரர் பரிந்துரைக்கும் மருத்துவர்கள் கொண்டு மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிமன்றம் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய 3 மருத்துவர்களை உயர்நீதிமன்றம் நியமித்தது. தமிழகம் அமைதி பூங்கா என சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் அந்த நம்பிக்கையை புரட்டி போட்டுள்ளீர்கள். இறுதிச் சடங்கு அமைதியாக நடைபெறுவதை மனுதாரர் உறுதி செய்ய வேண்டும்.

' isDesktop="true" id="773184" youtubeid="aGWOyG17R9k" category="tamil-nadu">

இனி சிபிசிஐடி விசாரணை:

மறு பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை அடக்கம் செய்யும் போது எந்த அசம்பாவிதமும் நடைபெற கூடாது. கல்வி நிலையங்களில் மரணம் நிகழ்ந்தால் இனி சிபிசிஐடி விசாரிக்க வேண்டும். கலவர பின்னணியில் அரசியல் கட்சிகள் இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை தேவை. கனியாமூர் மாணவி மரணம் குறித்த விசாரணை அறிக்கையை வரும், 29ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

top videos

    ஊடகங்களுக்கு யாரும் பேட்டி கொடுக்க கூடாது. மறு பிரேர பரிசோதனையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கேசவன் உடன் இருக்க அனுமதி. அனைத்தும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    First published:

    Tags: Death, Kallakurichi, Private schools, School student