கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் கனிமொழி, உதயநிதி
ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன்? என
பாஜக வெளிநாடுவாழ் தமிழர் நலன் பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
4வது நாளான இன்று அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன்? என பாஜக வெளிநாடுவாழ் தமிழர் நலன் பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம் கூறும்போது, கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் மர்மமான முறையில் பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபொழுது கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கு எதிரான பிரச்சினைகளுக்கும் வருத்தம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.