திமுக பிரமுகரை தாக்கியது உள்ளிட்ட வழக்குகளில் கைதாகி, ஜெயக்குமார் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,
சென்னையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை மிரட்டி பறித்துக் கொண்டதாக, ஜெயக்குமார் அவரது மகள் மற்றும் மருமகனுக்கு எதிராக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளிக்கிழமை அன்று ஜெயக்குமாரை மீண்டும் கைது செய்தனர். இதுதொடர்பான விசாரணைக்காக, அவர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும்,
நில அபகரிப்பு புகார் எப்படி சிவில் வழக்கு பிரிவில் இடம்பெறும் என்றும் ஜெயக்குமார் தரப்பு வாதிட்டது.தனது தரப்பு நியாயங்களை தானே எடுத்துரைத்த ஜெயக்குமார், 1991ம் ஆண்டு முதல் பல்வேறு அரசு பதவிகளில் தான் இருந்து வருவதாகவும், இதற்கு முன்பு தன் மீது ஒரு வழக்கு கூட கிடையாது எனவும் குறிப்பிட்டார்.
Also Read : என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்துள்ளது: தமிழன் என்று சொல்ல உரிமையுள்ளது - ராகுல் காந்தி
திருக்குறளை தான் விரும்பி படிப்பேன் என கூறி, ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை என்ற திருக்குறளை மேற்கோள்காட்டினார். அதன்படி, குற்றத்தை ஆராய்ந்து எந்த பக்கமும் சாயாமல் நடுநிலை தவறாமல், வழங்கப்படுவதே நீதி என நீதிமன்றத்தில் ஜெயக்குமார் விளக்கினார். ஆனால், ஜாமின் வழங்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததை ஏற்ற நீதிபதி, ஜெயக்குமாரை வரும் 11ம் தேதி வரையில் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.