தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்யாமல், அதனை சமாளிக்க அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை பொய்த்துப் போன நிலையில், அதனை அரசு எவ்வாறு சமாளித்து வருகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தண்ணீர் பிரச்னையை சமாளிக்க 499 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையில் அரசியல் செய்யாமல் அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதனிடையே, நமது செய்தியாளரிடம் பேசிய சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஹரிஹரன், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி, பொதுமக்களுக்கு தேவையான தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமே இதற்கு உடனடியாக தீர்வு காணமுடியும் என்றும் அவர் கூறினார்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Save Water, Water Crisis