ஜல்லிக்கட்டு போட்டிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை எதிர்த்து, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு நீதிபதி ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்ற நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - தமிழக அரசு விளக்கம்
இந்நிலையில் 2023ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்று எதிர்பார்த்த நிலையில் தமிழக அரசு தரப்பில் இருந்து கால்நடை பராமரிப்புதுறை தகவலின் அடிப்படையில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொண்டு இருக்கிறோம். அடுத்த மாதம் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பொங்கல் தினமான ஜனவரி 14ம் தேதி அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jallikattu, Supreme court, Tamil Nadu government, TN Govt