இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர் மக்கள் அரசின் கொள்கைகளை விளக்கினார். எனினும் திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற வார்த்தையையும் தவிர்த்துவிட்டார்.
இந்த நிலையில் சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் உரைக்கு பின்னர் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆளுநர் அரசின் கொள்கைக்கு மாறாக தமிழ்நாடு அரசு தயாரித்த அறிக்கையை படிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இன்றைக்கு அச்சிடப்பட்டு ஆளுநர் மற்றும் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டவை மட்டும் அவை குறிப்பில் இடம் பெற வேண்டும். சட்டப்பேரவை விதிப்படி, அச்சிடப்பட்ட உரையை மட்டும் அவை குறிப்பில் இடம் பெற வேண்டும்.” என கோரிக்கை விடுத்தார். அத்துடன், அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார். இறுதியாக தீர்மானம் நிறைவேறியது.
சட்டமன்ற மரபுகளை மீறிய ஆளுநர், தேசிய கீதம் பாடும் முன்பு அவையை விட்டு வெளியேறினார். இந்தியில் பாஜக எம்.எல்.ஏக்கள் முழக்கம். அன்னை தமிழை, தமிழ்நாட்டை காப்போம்.
— Mano Thangaraj (@Manothangaraj) January 9, 2023
இந்நிலையில் சட்டப்பேரவை சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், '' சட்டமன்ற மரபுகளை மீறிய ஆளுநர், தேசிய கீதம் பாடும் முன்பு அவையை விட்டு வெளியேறினார். இந்தியில் பாஜக எம்.எல்.ஏக்கள் முழக்கம். அன்னை தமிழை, தமிழ்நாட்டை காப்போம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TN Assembly