முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் எச்சரிக்கை

கோப்புப்படம்

கோப்புப்படம்

ஏற்கனவே, வெப்பசலனத்தின் காரணமாக இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கனவே, வெப்பசலனத்தின் காரணமாக இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சென்னை, புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

Also read: சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட வேண்டாம்; கோவை சைபர் கிரைம் போலீஸ் பெண்களுக்கு அட்வைஸ்

தொடர்ந்து, தமிழகத்தில் 21.06.2021 முதல் 23.06.2021 வரை உள்ள தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

First published:

Tags: Meteorological dept, Rain Forecast, Rain Update, Weather News in Tamil