மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 6-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று விடிய விடிய பரவலான மழை பெய்தது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்
இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 6-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
Also See..
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.