தொடர் கன மழையால், முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து நீர்ட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. மேலும் மழை நீடித்ததால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் ஆதாரமாக விளங்கும் பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், நேமம் ஏரிகள் நிரம்பும் நிலையை எட்டி உள்ளது. இன்று மாலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 21.33 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2942 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.
நீர் வரத்து வினாடிக்கு 400 கன அடி வந்து கொண்டிருக்கிறது.அதனால் தொடர்ந்து மழை பெய்து ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், நேமம் ஏரிகள் நிரம்பி நீர் வரத்து அதிகரித்தால் வெளியேற்றும் உபரி நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி நடந்தால் அடையாறு ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்படும் சூழல் உண்டாகும்.
அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் அதனால் வெள்ள பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில் உபரி நீரை சீராக வெளியேற்ற திட்டமிட்டு, இரண்டு செட்டர்கள் மூலம் 2 ஆயிரம் கன அடி நீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரியை 20 அல்லது 21 அடியில் சீராக வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, சேதாரம் இல்லாமல் இருந்தால் போதும், வரும் நாட்களில் மழை வருவது உண்மையாக இருக்குமானால் தக்க நடவடிக்கை எடுப்போம், சில நேரங்களில் வானிலை ஆய்வாளர்கள் சொல்வார்கள் ஆனால் மழை வேறு பக்கம் சென்று விட்டது என்பார்கள்.
அதிகபட்சமாக மழை இருக்குமானால் அனைத்து மதகுகளையும் திறந்துதான் ஆக வேண்டும். நீர் நிலைகளை காப்பாற்ற வேண்டும், சேதாரமானால் பெரும் விளைவை ஏற்படுத்தும். இவ்வளவு தண்ணீர் வீணாக போகிறது என எனக்கு அங்கலாய்ப்பு இருந்தாலும் மக்கள் உயிர் அதைவிட பெரியது.
ஆற்றங்கரையோரம் வீடு கட்டி இருப்பவர்கள் ஒத்துழைக்க வேண்டும். பொதுவாக நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு இருக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தின் திட்டவட்ட முடிவு. ஆனால் நம்மூரில் அது நடக்கவில்லை, நாங்கள் அகற்றுகிறோம் மீண்டும் வந்து விடுகிறார்கள்.
அதிமுக அமைச்சர்கள் செயல்பட்டார்களா என எனக்கு தெரியாது. கடந்த ஆட்சியாளர்கள் போல் நாங்கள் உபரி நீரை மொத்தமாக திறக்காமல் படிப்படியாக திறந்து விடுகிறோம். நீர் வெளியேற்றுவதை ஜாக்கிரதையாகவும், உள்ளே வருவதை கவனித்து கொண்டு இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Duraimurugan