பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
கடந்த 30-ம் தேதியுடன் ஓய்வுபெற இருந்த பொன்.மாணிக்கவேலை, மேலும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக செயல்பட நீதிபதிகள் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 30-ம் தேதியுடன் ஓய்வுபெற இருந்த பொன்.மாணிக்கவேலை, மேலும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக செயல்பட நீதிபதிகள் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு தடைவிதித்ததை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சிலைக்கடத்தல் வழக்குகளை ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடைவிதித்தது.
உச்ச நீதிமன்றம்
இந்நிலையில் கடந்த 30-ம் தேதியுடன் ஓய்வுபெற இருந்த பொன்.மாணிக்கவேலை, மேலும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக செயல்பட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்தும், பொன் மாணிக்கவேலுக்கு பணிநீட்டிப்பு வழங்குவதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
இந்த மனு, நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் நாகேஸ்வரராவ் அமர்வில் இன்று காலை 10-30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு ஆரம்ப கட்ட வாதங்களை கேட்ட நீதிபதிகள் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
4 வாரங்களில் மனுதாரர் மற்றும் அரசுத்தரப்பு வழக்கு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
Also see... ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்... பலசாலி மோடியா? ராகுலா?
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.