திருசெந்தூர் கோயில் அருகே உள்ள கடலில் மூழ்கி பக்தர்கள் உயிர் இழப்பதை தடுக்க 19.80 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்கபட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலைய துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
தமிழகத்தில் நீர் நிலைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு ராமேஸ்வரம், திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய கடலோர பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கடலில் மூழ்கி உயிர் இழப்பதை தடுக்க, தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் தடுக்க திட்டம் வகுக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி,நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு மற்றும் அறநிலைய துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது.
அந்த மனுவில், திருசெந்தூர் கோயிலில் அருகே உள்ள கடலில் மூழ்கி பக்தர்கள் உயிர் இழப்பதை தடுக்க சுமார் 19.80 கோடி ரூபாய் மதிப்பில் 520 மீட்டர் அளவில் சுவர் அமைக்கபட உள்ளதாகவும், ராமேஸ்வரம் கடற்கரை பகுதி நகராட்சிக்கு உட்பட்டது என்பதால் நகராட்சி ஊழியர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read... சேலம் பெருமாள் கோவில் சொத்துக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் கிரில் கதவுகள் எழுப்பட்டு குளத்திற்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கபட்டுள்ளதாகவும், கன்னியாகுமரி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கபடுள்ளதாக தெரிவிக்கபட்டிருந்தது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள பிரதான கோவில் குளங்களில் பக்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுதாக தொடர்பாக பட்டியல் தரப்பட்டது.
மேலும் இது தொடர்பாக மனுதாரர் உரிய ஆலோசனை வழங்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.