ரேஷன் கடையில் வரிசையில் நிற்பது என்பது உண்மையில் நேரத்தையும், உடல் சக்தியையும் விரயம் செய்வது. ஆனாலும் ரேஷன் பொருட்கள் அத்தியாவசியத் தேவை என்பதால் காலம் காலமாக ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் வரிசையில் காத்து பொருட்களை இன்னும் வாங்கி வருகிறார்கள்.
முக்கியமாக வீட்டில் உள்ள பெண்மணிகள் பெருமளவில் இதற்கு தங்களது நேரத்தைச் செலவழிக்கிறார்கள். பல நேரம் ரேஷன் கடை வரை சென்று அங்கு தான் வாங்க வேண்டிய பொருள் இல்லை என்பதால் வீடு திரும்பும் நிலையும் ஏற்படும். இதையெல்லாம் போக்க தமிழக அரசு ஒரு வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
இந்த வசதி மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பந்தப்பட்ட ரேஷன் கடை திறந்திருக்கிறதா, நமக்குத் தேவையான பொருட்கள் அங்கு இருப்பு உள்ளதா போன்றவற்றை மொபைல் மூலம் தெரிந்துகொள்ளமுடியும். அதுமட்டுமல்லாமல் ரேஷன் கடையில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்கப்பட்டால் புகார் அளிக்கவும் முடியும்.
இந்த வசதியை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்கும் காணொளி.
இந்த வசதியைப் பயன்படுத்தி நம் பொன்னான நேரத்தையும் விரயமாக்காமல் காத்துக்கொள்ளலாம்.
Published by:Saravana Siddharth
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.