விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டு உடனடியாக இடிக்கப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் முத்துசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்டட அனுமதிக்கு தற்போதுள்ள விதிமுறைகளில் நடைமுறைப்படுத்த முடியாத விதிகள் குறித்து பொறியாளர்கள், வரைகலையாளர்களிடம் கருத்து கேட்டுள்ளதாக கூறினார்.
மேலும் அவர்களிடம் இருந்து அறிக்கை கிடைத்த பின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார். கட்டடங்களுக்கு வரைபட அனுமதி அவசியமானது என குறிப்பிட்ட அவர், சிஎம்டிஏ மூலம் 270 கட்டடங்களுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், 9 கட்டடங்கள் விதிமீறிய நிலையில் உள்ளதால் அதன் பயன்பாட்டை நிறுத்தி வைத்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cmda