தன்பால் ஈர்ப்பு... வேறொருவருடன் தொடர்பு.. கொலையில் முடிந்த கொடூரம்..!
தன்பால் ஈர்ப்பு... வேறொருவருடன் தொடர்பு.. கொலையில் முடிந்த கொடூரம்..!
திருப்பூர் மாவட்டத்தில் குடும்பமாக வாழ்ந்த தன்பால் ஈர்ப்பாளர்கள் இருவருக்குள் ஏற்பட்ட பிரச்னை கொலையில் முடிந்துள்ளது. ஆண் நண்பர் வேறாரு ஆணுடன் தொடர்பில் இருந்தது தான் கொலைக்கான காரணமா?
ஆண் ஒருவரின் அழுகிய சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், 49 வயது நபருக்கும் 20 வயது இளைஞருக்கும் தன்பால் ஈர்ப்பில் ஏற்பட்ட பிரச்னை தான், கொலைக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டவரின் ஆண் காதலன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம் நொச்சிப்பாளையம் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி முட்புதர் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய வீரபாண்டி போலீசார், சடலத்தின் அருகில் கிடந்த செல்போன் மற்றும் அடையாள அட்டையை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். இறந்து கிடந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 49 வயது ரவீந்திரதாஸ் என்று உறுதி செய்யப்பட்டது.
அதே பகுதியில் அறையெடுத்து தங்கி, திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவரது செல்போனை ஆய்வு செய்ததில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த 20 வயது சுபாஷ் என்பவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். சுபாஷ் அதே பகுதியில் உள்ள வேறொரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
சுபாஷை பிடித்து போலீசார் விசாரித்தபோதுதான் ரவீந்திரதாஸ் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. சுபாஷும் ரவீந்திரதாஸூம் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.
நண்பர்களான இருவரும் தன்பால் ஈர்ப்பாளர்கள் என்பதால் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். காதலர்களாக இருவரும் அடிக்கடி ஊர் சுற்றி உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில்தான் கடந்த சில நாட்களாக ரவீந்திரதாஸூக்கு வேறொரு ஆண் நண்பருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் அடிக்கடி ரவீந்திரதாசுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த 13 ஆம் தேதி இருவரும் நொச்சிப்பாளையம் அருகே உள்ள முட்புதர் அருகே சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் ஆண் நண்பர் தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது தான் ஆத்திரத்தில் சுபாஷ், ரவீந்திரதாஸை தலையில் அடித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தன்பால் ஈர்ப்பாளர்கள் மத்தியில் ஏற்பட்ட சந்தேகபுத்தி கொலையில் முடிந்த சம்பவம் நொச்சிப்பாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.