சென்னை ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த 2015, 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு கால அவகாசம் கோரியது.
அதை ஏற்று குடியிருப்புகளை காலி செய்ய இந்த கல்வியாண்டு வரை அவகாசம் அளித்த நீதிமன்றம், வணிக கட்டிடங்கள் மீதான நடவடிக்கையை தொடர வேண்டுமென உத்தரவிட்டது.
இந்நிலையில் பெத்தேல் நகர் குடியிருப்போர் தரப்பில், 30 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் 30 ஆயிரம் மக்களை ஒரே இரவில் அப்புறப்படுத்தக் கூடாது எனவும், புதிய இடத்துக்கு மாறுவதில் சிக்கல்கள் உள்ளதாகவும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மெய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலமாக மாற்றி பட்டா வழங்க அரசுக்கு உத்தரவிடவும், மாற்று இடம் வழங்க உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை மார்ச் 16ல் விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, பெத்தேல் நகரில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த கூடுதல் மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.