தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சமச்சீர் கல்வி திட்டத்திற்கு பதிலாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற வழக்கை தள்ளுபடி செய்த
சென்னை உயர்நீதிமன்றம், அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில்,
தமிழக மாணவர்கள் உயர்கல்வி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் வேலை வாய்ப்புகள் இவைகளை ஏதிர்க்கொள்ள நுழைவு தேர்வு, தகுதி தேர்வு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு வடிவமைக்கும் பாட திட்டத்தின் படி படிக்கவேண்டியுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக சமச்சீர் கல்வி பாட புத்தகம் வடிவமைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் இவர்களின் பிள்ளைகளுக்கு நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் கல்வியும், அரசுக்கு வரி செலுத்தும் மக்களுக்கு சமச்சீர் கல்வி முறை என இரு வேறு கல்வியின் காரணமாக சமச்சீர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழகத்தில் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி குழு வடிவமைப்பும் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
சசிகலாவுக்கு செய்த துரோகம் துரத்திக்கொண்டே இருக்கும் -அ.தி.மு.க தோல்வி குறித்து கருணாஸ்
அப்போது நீதிபதிகள், இதுபோல் அமல்படுத்த முடியுமா ? எதன் அடிப்படையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது ? தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் என்சிஆர்டி பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று எந்த சட்டத்தில் விதிகள் உள்ளது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
அரசின் நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.