தமிழகத்தில் நாளை அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் கடந்த வாரம் மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே கரையை கடந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை நீடித்து வருகிறது. மேலும் அரபிக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1. திருவள்ளூர் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)
2.செங்கல்பட்டு (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)
3.காஞ்சிபுரம் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.