தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று முதல் 4 நாட்களுக்கு ஆங்காங்கே மழை பெய்யும் என்றும்
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (செப்டம்பர் 23) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 25ஆம் தேதியும் (சனிக்கிழமை) சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில், நள்ளிரவில் கடும் குளிர்காற்றுடன் கனமழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவில் கனமழை கொட்டியது. நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், வேளச்சேரி, கோயம்பேடு, ராயப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், சூளைமேடு, முகலிவாக்கம் மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல் மற்றும் கிணடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது, பலத்த காற்றால், அசோக் நகரில் மரம் ஒன்று, சாய்ந்து சாலையில் விழுந்தது. பல்வேறு இடங்களில் கடும் சத்தத்துடன் இடி, மின்னல்களுடன் மழை பெய்தது.
Must Read : கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை..!
இதேபோன்று, புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், பூந்தமல்லி, குன்றத்தூர், போரூர், காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, குமணன்சாவடி, திருவேற்காடு மற்றும் மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும், விடிய, விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.