பேரணாம்பட்டு மஜ்ஜித் தெரு பகுதியில் ஹபிப் என்பவருக்கு சொந்தமான பழமையான வீடு உள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கன
மழை காரணமாக அவ்வீடு சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் நேற்று குழந்தைகள், பெண்கள் உட்பட 15 பேர் உறங்கி கொண்டிருந்தனர். அதிகாலையில் திடீரென வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குழந்தைகள் அபிரா, அப்ரா, தமீல், மனுல்லா மற்றும் 5 பெண்கள் உட்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். படுகாயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனைக்கு சென்ற அவர், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனிடையே வீடு இடிந்து 9 பேர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தததாகவும் உயிரிந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.