முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பால் ஏன் பாட்டிலில் விற்கக்கூடாது?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை

பால் ஏன் பாட்டிலில் விற்கக்கூடாது?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை

மாதிரி படம்

மாதிரி படம்

அரசு பிளாஸ்டிக்கில் பொருட்களை விற்பனை செய்யலாமா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  • Last Updated :

பால் பொருட்களுக்கு தான் பெருமளவிற்கு பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் பயன்படுத்தபடுகிறது, பால் ஏன் முன்பு போல பாட்டிலில் விற்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்ட்டிக் தடை உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும், பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதாக கடைகள் சீல் வைக்கப்பட்டது குறித்த அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உணவு பொருட்கள், தீன்பண்டங்கள், விளையாட்டு பொம்மைகள், துணிமணிகள் பிளாஸ்டிக் பைகளில் புகுத்தி விற்கப்படுவதாக கூறி நீதிபதிகளிடம் காண்பித்தார்.மேலும் அவர் மஞ்சள் பை திட்டம் கொண்டு வந்தாலும் 15 பொருட்கள் பிளாஸ்டிக்கில் வைத்து விற்கப்படுகிறது என தெரிவித்தார்.

Also read... ஏழு பேர் விடுதலை விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் நளினி தரப்பில் முக்கிய வாதம்

இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துச் வருவதை தடுக்காத வரையில் அவற்றைப் பறிமுதல் செய்வதால் பெரிய அளவில் பலன் இல்லை என  நீதிபதிகள் தெரிவித்தனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக கூறி சில்லரை வியாபார கடைகளை மூடும் நிலையில், அரசு பிளாஸ்டிக்கில் பொருட்களை விற்பனை செய்யலாமா என நீதிபகள் கேள்வி எழுப்பினர்.

top videos

    ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை பிளாஸ்டிகில் அடைத்து மஞ்சள் பையில் வழங்குவதால் எந்த பயனும் இல்லை, அரசு நடத்தும் கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் எப்படி தடையை அமல்படுத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பால் ஏன் முன்பு போல பாட்டிலில் விற்கக்கூடாது எனவும், பால் பொருட்களுக்கு தான் பெருமளவிற்கு பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் பயன்படுத்தபடுகிறது என கருத்து தெரிவித்து, வழக்கின் விசாரணையை ஜூன் 13 க்கு தள்ளிவைத்தனர்.

    First published:

    Tags: Madras High court, Milk, Plastic Ban