ஆன்லைன் விசாரணையில் பெண்ணிடம் சில்மிஷம்.. வழக்கறிஞருக்கு சிறை தண்டணை
ஆன்லைன் விசாரணையில் பெண்ணிடம் சில்மிஷம்.. வழக்கறிஞருக்கு சிறை தண்டணை
சென்னை உயர்நீதிமன்றம்
உயர் நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர்,பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது காட்சிகள், வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வழக்கறிஞருக்கு இரண்டு வாரங்கள் சிறை தண்டனையும், 6,000 ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர்,பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது காட்சிகள், வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் தலைமையிலான அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு இரண்டு வாரங்கள் சாதாரண சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
ஏற்கனவே இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர், 34 நாட்களாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால், தண்டனையை கழித்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சிபிசிஐடி-க்கு பாராட்டு தெரிவித்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.