சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- நீதிமன்றம் கேள்வி
சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- நீதிமன்றம் கேள்வி
சென்னை உயர்நீதிமன்றம்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ள நின்னக்கரை ஏரியைச் சுற்றிய பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படாமல் கழிவு நீரை விடுவதால் ஏரி மாசுப்படுவதோடு, அப்பகுதியின் நிலத்தடி நீரும் மாசடைவதாக கூறி, நின்னக்கரை ஏரியைப் பாதுகாக்கக்கோரி, கடந்த 2018ல் இளங்கோவன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
சட்டத்தைப் பின்பற்றாத தனியார் தொழிற்சாலைகளை மூடும்போது, சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ள நின்னக்கரை ஏரியைச் சுற்றிய பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படாமல் கழிவு நீரை விடுவதால் ஏரி மாசுப்படுவதோடு, அப்பகுதியின் நிலத்தடி நீரும் மாசடைவதாக கூறி, நின்னக்கரை ஏரியைப் பாதுகாக்கக்கோரி, கடந்த 2018ல் இளங்கோவன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வுல் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி நேரில் ஆஜரானார்.
அப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தைப் பின்பற்றாத தனியார் தொழிற்சாலைகளை மூடும்போது, சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டுவதன் மூலம் வாரியம் தொடங்கப்பட்டதின் நோக்கம் அர்த்தமற்றதாகிறது எனவும் தெரிவித்தனர்.
அதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சட்ட விதிகளை பின்பற்றாத உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடு கோர தொடங்கியுள்ளதாகவும், அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் உயர் அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.