டிடிவி மற்றும் நடிகர் செந்திலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம்
டிடிவி மற்றும் நடிகர் செந்திலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம்
டிடிவி தினகரன்
TTV Dhinakaran | கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு முன்பாக நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதிமுக முன்னாள் எம்.பி.குமார் குறித்து அவதூறாக பேசியதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்திலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு முன்பாக நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், திருச்சி தொகுதியின் எம்.பி குமார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதாக திருச்சி மத்திய குற்றப்பிரிவில் குமார் புகார் அளித்தார்.
அதில் டிடிவி தினகரனின் தூண்டுதலின் பேரில் தான் நடிகர் செந்தில் தன்னை பற்றி அவதூறாக பேசியதால் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இதனையடுத்து தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீது திருச்சி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தினகரன் மற்றும் செந்தில் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.