முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அமித்ஷா வருகையின் போது விதிகளை மீறி பேனர் - நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி

அமித்ஷா வருகையின் போது விதிகளை மீறி பேனர் - நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி

அமித்ஷா

அமித்ஷா

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு பொது நல நோக்குடன் தொடரப்பட்டதாக தெரியவில்லை எனவும், அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்டுள்ளதாக கூறி, டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது விதிமீறி பேனர்கள் வைத்தோர் மீது நடவடிக்கை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது அவரை வரவேற்று மாநகரம் முழுவதும் விதிமீறி பேனர்கள் வைத்தவர்கள் மீதும், விதிமுறைகளை மீறி ஒன்று கூடியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர், காவல்துறையிடம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புகார் அளித்திருந்தார்.

அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜய் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Also read... இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்... இறுதியில் முதல்வர் வேட்பாளர் யாரோ அவரை ஏற்போம் - பிரேமலதா!

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு பொது நல நோக்குடன் தொடரப்பட்டதாக தெரியவில்லை எனவும், அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்டுள்ளதாக கூறி, டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Amit Shah, Banners, Madras High court