மணிமுத்தாறு நதியின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றியதை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், பெருந்துறை கிராமத்தில் மணிமுத்தாறு நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென பெருந்துறைக்கு பதிலாக பெரியகோட்டுமுளை எனும் கிராமத்தில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டது.
இதை எதிர்த்தும், பெருந்துறையிலேயே தடுப்பணை கட்ட உத்தரவிடக் கோரியும், அப்பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை கட்டினால் பல கிராமங்கள் பாசன வசதி பெறும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு விளக்கமளிக்கும்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை பொறியாளர், விருத்தாச்சலம் செய்ற்பொறியாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மே 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.