குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உட்பட 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு விற்க அனுமதியளித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, செங்குன்றம் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தது.
இவர்களில் மாதவராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோர் ஜாமின் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி திருநீலபிரசாத் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த முறைகேடு தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை நடத்த உள்ள நிலையில், இவர்களை ஜாமீனில் விடுவித்தால், சாட்சிகளை கலைக்க கூடும் என சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சிபிஐயின் வாதத்தை ஏற்ற நீதிபதி, மூவரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சிவகுமாரின் ஜாமீன் மனுவுக்கு வரும் 23-ம் தேதி பதிலளிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டார்.
See Also:
Published by:DS Gopinath
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.