தமிழகத்துக்கான ஜிஎஸ்டி நிதியை, வேண்டும் என்றே நிறுத்தி வைக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இந்திய பொருளாதாரம் வலுவான நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொழில்துறையினருக்காக சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். அப்போது, மாநிலங்களுக்கான நிதியைக் குறைக்கும் திட்டம் ஏதுமில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அத்துடன், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 4 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து கேட்கப்பட்டபோது, தமிழகத்துக்கான நிதி விரைவில் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
அனைத்து மாநிலங்களும் கேட்டுக் கொண்டால் பெட்ரோல், டீசல் வரியை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று பட்ஜெட்டில் குறிப்பிட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தைத் தொட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.