தமிழகத்தில் மொழி திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், புதிய கல்விக்கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்கப்படுத்துகிறது என்றும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலை பழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தமிழில் வாழ்த்துகளை தெரிவித்தார். நமது நாடு புதிய நம்பிக்கையுடன் முன்னேறி சென்று கொண்டிருப்பதாக கூறினார்.
கடந்த 7 ஆண்டுகளில் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்றார். தமிழகம் பல்வேறு துறைகளில் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக கூறிய ஆளுநர், தமிழ் சிறப்பாக உயர்ந்த மொழி என குறிப்பிட்டார்.
பிற நாடுகளில் உள்ள பல்கலைகழகங்களில் தமிழ் இருக்கை அமைத்து இருப்பதைப் போல , இந்தியாவில் உள்ள பிற பல்கலைக் கழகங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என்றார். மத்திய அரசு தமிழத்தின் மீது மொழியை திணிப்பதாக சிலர் கூறுவதில், உண்மை இல்லை எனவும் ஆளுநர் ரவி கூறினார்.
புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். கோவை பாரதியார் பல்கலைத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.