முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: தமிழ்நாடு அரசுக்கு 8 கேள்விகள் எழுப்பிய கவர்னர்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: தமிழ்நாடு அரசுக்கு 8 கேள்விகள் எழுப்பிய கவர்னர்!

முதலமைச்சர் ஸ்டாலின், கவர்னர் ரவி

முதலமைச்சர் ஸ்டாலின், கவர்னர் ரவி

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு 4 மாதங்கள் கடந்த நிலையில் இரண்டாம் முறையாக விளக்கம் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசிற்கு முகாந்திரம் இல்லை என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார்.

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், டிசம்பர் 1ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருந்தது.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி மசோதாவை மீண்டும் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு 4 மாதங்கள் கடந்த நிலையில் இரண்டாம் முறையாக விளக்கம் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதில் மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி 8 கேள்விகளை எழுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்படி இந்த மசோதா எப்படி சாத்தியமாகும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டில் இந்த விவகாரம் வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: CM MK Stalin, Online rummy, RN Ravi