புதுக்கோட்டை அருகே டீக்கடைக்குள் புகுந்து இளைஞரை மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் ராம் தியேட்டர் கார்னரில் உள்ள டீக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஐயப்பனை சரமாரியாக தாக்கியதோடு கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
கடையில் இருந்த பொதுமக்கள் ஐயப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருக்கோகர்ணத்தை சேர்ந்த தாமோதரன் மற்றும் காமராஜபுரத்தை சேர்ந்த பரோட்டா மணியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.