2019-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தமிழகத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி வெளியாகியது.
இந்த தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பெரம்பலூரை சேர்ந்த கீர்த்தனா, திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா, திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சுபஸ்ரீ என 4 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு இன்னும் எத்தனை உயிர்களை பலிவாங்கப் போகிறதோ என்று தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் நீட் தேர்வினை ரத்து செய்ய கோரி குரல் எழுப்பினர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.