தருமபுரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திமுக முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், 500-க்கும் மேற்பட்டோர்கள் உடன் அதிமுக-வில் இணைந்தார்.
திமுக முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன்,அதிமுக இணைப்பு விழாவில் பேசிய முதல்வர், தருமபுரி மாவட்டத்தில் முல்லைவேந்தன் தனக்கென ஒரு தனி செல்வாக்கை பெற்றிருக்கிறார். கிராமம் நல்லா இருக்க வேண்டும் என நினைப்பவர். நீர் பாசன திட்டம் வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என எண்ணிடத்தில் மனு கொடுத்தார்.
எங்கள் ஆட்சியில் விவசாயத்திற்கும், விவசாய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை நிறைவேற்றியுள்ளோம். தற்போது முல்லைவேந்தன், கட்சியில் இணைந்திருப்பது இயக்கத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.
அவர் இந்த இயக்கத்தில் இணைந்ததால், மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு என எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.