ஹிட்லர், முசோலினியின் அவதாரம் தான் ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக பி்ரமுகரை தாக்கியதாக கைதாகி, மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பிணை ஆணை வழங்கியது. இதனையடுத்து நேற்று மாலை அவர் விடுவிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாலை 6 மணியானதால் சிறைத்துறை விதிகளின்படி பிணையில் விடுவிக்க இயலாது என கூறப்பட்டு, இன்று காலை 6.30 மணிக்கு புழல் சிறையில் இருந்து ஜெயகுமார் விடுவிக்கப்பட்டார்.
Also Read : யார் பெரிய ரவுடி.. டபுள் ரஞ்சித் கொலையில் திடுக்கிடும் தகவல்
அப்போது, முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி மற்றும் ஏராளமான அதிமுகவினர் சிறை வளாகத்தில் குவிந்து, அவரை வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, 20 நாட்கள் அனைவரையும் மிஸ் பண்ணிட்டதாக வருத்தப்பட்டார். திமுக பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்களுக்கு நல்லது எதுவும் செய்யாமல் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஒரே வேலையாக அதிமுகவை அழித்துவிட வேண்டும் என ஸ்டாலின் நினைப்பதாக தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின், சேடிஸ்ட், பாசிஸ்ட் எனவும், ஹிட்லர் முசோலினியின் மறுஉருவம் தான் ஸ்டாலின் எனவும் கடுமையாக விமர்சித்தார். தம் மீது திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது எனவும், ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் தம் மீது பொய் வழக்கு போடப்பட்டது எனவும், குற்றம்சாட்டினார். கள்ள ஓட்டு போடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, கள்ள ஓட்டு போட்ட திமுக பிரமுகர் மீது செயின் பறிப்பு,கொரோனா காலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியது என 14 வழக்குகள் உள்ளதாகவும், அவரை திமுகவினர் என ஸ்டாலின் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Also Read: திருமணமான இரண்டே நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
தமிழக முதல்வர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு கடமையை செய்ய வேண்டும். ஜனநாயக ரீதியில் கடமையை செய்யும் போது முதல்வர் தம்மை பாராட்டி இருக்க வேண்டும், ஆனால் தம் மீது பொய் வழக்குப் போட்டு 20 நாட்கள் சிறையில் இருந்தேன் ஆனால் கள்ள ஓட்ட திமுக நபர் 20 நாட்கள் மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டு நேற்று தான் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் எனவும், இதுபோன்ற ஒரு காரியத்திற்கு ஸ்டாலின் துணை போனது வேதனையான விஷயம் என தெரிவித்தார்.
தான் சிறையில் இருந்த போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தம்மை சந்தித்து ஆறுதல் கூறினர். பாஜகவின் அண்ணாமலை, தமாகவின் ஜிகே வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர் எனவும், அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்தார். கருணாநிதி காலத்தில் எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுகவை அழிக்க முடியவில்லை மாறாக 2011-இல் மாபெரும் இயக்கமாக உருவானது அதேபோல எத்தனை கருணாநிதி வந்தாலும் இந்த இயக்கத்தை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது.
ஹிட்லர் ,முசோலினி அவதாரம் தான் ஸ்டாலின் இந்த இயக்கத்தை அசைத்து கூட பார்க்க முடியாது. ஐபிசியில் உள்ள அனைத்து பிரிவுகளும் தம்மீது போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தம்மை தீவிரவாதிகளை அடைக்கும் பூந்தமல்லி கிளையில் அடைத்ததாகவும், 20 நாட்களாக புழல் சிறையில் இருந்தும் உயர்நீதிமன்றம் பிணை உத்தரவு வழங்கியும், சிறை நிர்வாகம் நேற்று வெளியில் விடவில்லை. 7 மணிக்கு பிணை ஆணை வந்தும் கூட நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தம்மை வெளியில் விடவில்லை. அதிமுகவின் எழுச்சியை ஸ்டாலினால் தடுக்க முடியாது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அரசின் உத்தரவை மதித்த சிறை நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.