சென்னையை சுனாமி தாக்கியபோது வீடுகளை இழந்த பொதுமக்களைப் பாதுகாக்க செம்மஞ்சேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அரசால் கட்டப்பட்டு சுனாமி குடியிருப்புப் பகுதி உருவாக்கப்பட்டது. கடல் தண்ணீரிலிருந்து தப்பித்துவிட்டோம் என நிம்மதியடைந்த இப்பகுதி மக்கள் நிவர் புயலால் நடுத்தெருவில் நின்றுகொண்டிருக்கின்றனர். சென்னை முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை செம்மஞ்சேரியை தீவு போல் மாற்றிவிட்டது.
பகல் நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றியே களைப்படைந்த இப்பகுதி மக்கள் மீண்டும் தண்ணீரை வெளியேற்ற சக்தி இல்லாமல் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். நீர் சூழ்ந்துள்ளதால் கடந்த 4 நாட்களாக இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உணவிற்கே வழியில்லாததோடு, கை குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட வழியில்லை என கண்ணீர் வடிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புப் பகுதி வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்.

சுனாமி குடியிருப்புப் பகுதி வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்.

சுனாமி குடியிருப்புப் பகுதி வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்.
முதியவர்களின் நிலையோ இன்னமும் மோசமாக உள்ளது. விடிந்தால் உயிரோடு இருப்போமா, இல்லையா என்ற அச்சத்துடன் இரவுப்பொழுதைக் கடக்கின்றனர். மருத்துவ வசதி இல்லாமல், அவசரத்திற்கு மருத்துவமனை செல்ல வசதியில்லாமல் மரண பீதியில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டால் மட்டுமே செம்மஞ்சேரி பழைய நிலைக்கு திரும்பும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.