FIRST HUSBAND TORTURES CHILD IN KANYAKUMARI VIDEO VAI
முதல் கணவர் குழந்தையை கடித்து சித்ரவதை.. இரண்டாவது கணவர் வக்கிரம்.. தாயும் உடந்தை.. சிறுவன் மீட்கப்பட்டது எப்படி?
கன்னியாகுமரி மாவட்டத்தில் சேர்ந்து வாழ்ந்த இளம்பெண்ணின் முதல் கணவருக்குப் பிறந்த 7 வயது சிறுவனை, இரண்டாவது கணவர் கொடூரமாகக் கடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளார். சிறுவன் மீட்கப்பட்டது எப்படி?
சிறுவனுக்கு போதிய உணவும் உடையும் கொடுக்கவில்லை என்று அக்கம்பக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மாலை, வீட்டில் இருந்த முருகன், சிறுவனைப் பிடித்து முதுகு, கை, கால், தொடை உள்ளிட்ட பகுதிகளில் கொடூரமாகக் கடித்துத் துன்புறுத்தியுள்ளார்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, நித்திரவிளை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
சசிகலாவிடம் சிறுவனுக்கு நடத்தப்பட்ட சித்ரவதைகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான முருகனைத் தேடி வருகின்றனர்.