சென்னையில் பொங்கலுக்காக விற்கப்படும் கரும்புக்கு, உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொங்கலை முன்னி்ட்டு, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை கடந்தாண்டைவிட கணிசமாக குறைந்துள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் கரும்பு வரத்து அதிகம் காணப்படுகிறது.
20 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வழக்கமாக 25 லாரிகளில் கொண்டு வரப்படும் கரும்பு விற்று தீரும் நிலையில், தற்போது 5 லாரி கரும்பு கூட விற்கவில்லை என்று விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
கொரோனா காரணமாக மக்களிடம் பணம் இல்லை என்றும், கரும்பு வாங்க மக்கள் முன்வரவில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வண்டி வாடகை, டீசல் விலை உயர்வு காரணமாக தங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை என்றும் வியாபாரிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.