திண்டுக்கல் அருகே விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி, வறட்சியால் கருகும் வெங்காயச் செடி பயிர்களை விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனர்.
வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைப்பட்டி, கோம்பை, பாகாநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெற்று வருகிறது.
தற்போது அப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துள்ளது. இதனால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை என 2 ஆயிரம் ரூபாய்க்கு டிராக்டர் மூலம் தண்ணீரை வாங்கி, பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.