ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகத்தொற்று உள்ளிட்ட உடல் பிரச்சனைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவருக்கு 6ஆவது முறையாக பரோல் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அவரின் தாயார் அற்புதம்மாள் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள பரோல் வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தார்.
அந்த மனுவின் பேரில் கடந்த மே மாதம் 28ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து 5 மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பரோலை மேலும் நீட்டிக்கக்கோரி அற்புதம்மாள் மனு அளித்திருந்தார்.
அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மீண்டும் 6ஆவது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பரோல் வழங்கப்பட்டதையடுத்து,பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரின் வீட்டில் இருந்து வருகிறார்.
கடந்த வாரம், சிறுநீரக தொற்றுக்காக, சிடி ஸ்கேன் எடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பேரறிவாள அழைத்து வரப்பட்டார். அங்கே அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
Must Read : பேரறிவாளனுக்கு 6ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு
அதன் பின்னர், மீண்டும் அவரது இல்லத்திற்கே அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.